சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றி அறிவித்து உள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அதனப்டி, அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெறும்  என அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் ஏராளமானோரை பெயிலாக்கியது அண்ணா பல்கலைக்கழகம் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சூரப்பான ஓய்வுபெறும் நிலையில், வேண்டுமென்றே பெயிலாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையிலான அரசு, அண்ணா பல்கலைக்கழகதுடன் பேசி, மீண்டும் தேர்வை நடத்த அறிவுறுத்தியது. அதன்படி, ஜுன் மாதம் மீண்டும் மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த தேர்வு அட்டவனையையும் அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியுள்ளது.   பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும் மறுதேர்வு உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 14ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட தேர்வானது வரும் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த தேர்வானது காலை,மாலை என இருவேளை 3 மணி நேரம் ஆப்லைன் முறையில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,மேலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என்றும், மேலும்,மாணவர்கள் தேர்வு எழுதியதும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரியர் மாணவர்களுக்கான தேர்வானது வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும்  மறுதேர்வுக்கான செமஸ்டர் தேர்வுகளின் அட்டவணையானது தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

anna unviersity-exam shedule-10