சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 – ரூ. 29,000 வழங்கப்பட உள்ளது.

இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250ல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ. 7,800 – ரூ. 26,000 வழங்கப்படவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.