சென்னை:

ரேசன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மக்கள் பயன்படுத்தும் ரேசன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும். தற்போதுள்ள ரேசன் கார்டுகளின் காலம் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட உள்தாள் சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் வழியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது