ரத்னகுமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருக்கும் கதை மிகவும் பிடித்துவிடவே சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விரைவில் இந்தப் புதிய கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். ‘மாஸ்டர்’ படத்தின் திரைக்கதையிலும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிந்தார் ரத்னகுமார்.