நாமக்கல்: ராசிபுரம் திமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ம.மதிவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். அம்மனு மீது இன்று பரிசீலனை நடைபெற்றது. இதில் அவரது மனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதற்கு காரணமாக நாமக்கல், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளில் அவருக்கு ஓட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவரது வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

நாமக்கல் தொகுதியில் இருந்த பெயர் கடந்த ஆண்டே நீக்கப்பட்டு விட்டதாக ஆதாரத்துடன் மதிவேந்தன் விளக்க கடிதம் அளித்தார்.  இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார். அதிமுக சார்பில் போட்டியிடும் சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.