கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கிய இந்தப் படம் இந்தியிலேயும் இவராலேயே ரீமேக் செய்யப்பட்டது .

இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனால், இந்தி திரையுலகில் சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியில் சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்தப் படத்தில் ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

இந்தப் படத்தை ‘கபீர் சிங்’ தயாரிப்பாளரே தயாரிக்கவுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தயாரிப்பாளர் மற்றும் ரன்பீர் கபூர் இருவருக்கும் இறுதிக்கதையை சொல்ல சந்தீப் ரெட்டி வாங்கா தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.