https://www.instagram.com/p/B-5ERG_HhHK/

தமிழ் சினிமாவில் தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் வலம் வந்தவர் ரம்பா.

1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர். தமிழ், தெலுங்கு , ஹிந்தி, மலையாளம் என்று பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்தார் .

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு லாண்யா என்ற மகளையும் 2015 ஆம் ஆண்டு ஷாஷா என்ற மற்றுமொரு மகளையும் ஈன்றுடுத்தார் நடிகை ரம்பா. ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பாவிற்கு கடந்த 2018 ஆம் ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 11ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெற்று 10 வருடங்கள் முடிந்ததால் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணாமாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே குழந்தைகளுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அவர். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்களும் ரம்பா-இந்திரகுமார் ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.