அலகாபாத்: பட்டா கத்திகளுடன் நாட்டின் பல பகுதிகளில் இந்துத்துவா அமைப்புகள் பேரணிகளை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடு முழுதும் பரவலாக ராமநவமி கொண்டாடப்படுகிறது.  இதொயொட்டி இந்துத்துவா இயக்கங்கள் பேரணிகள் நடத்தின. மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பட்டாக் கத்திகளை இளைஞர்கள் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினி அமைப்பைச் சேர்ந்த ஆண்களும்  பெண்களும் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்திலும் பட்டாக் கத்திகளை உயர்த்தி பிடித்தபடி முழக்கமிட்டபடி கலந்துகொண்டனர்.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.