அயோத்தி

அயோத்தியில் ராமர் கோவி கட்டுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு கும்பாபிஷேக அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 22 ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது..  அனைத்து எதிர்க்கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு  இதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த கோவில் கட்டுமானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலம் விசாரணையில் இருந்தது.

இந்த ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரிக்கும் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அவர் அயோத்தி ராம பாதை அருகே உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் வசித்து வருகிறார். ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் அவரது வீட்டுக்குச் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினர்.

இக்பால் அன்சாரியின் மகள் ஷாமா பர்வீன் ‘ அப்பாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து  வழங்கிய தீர்ப்பை முஸ்லிம் மக்கள் சார்பில் மதிப்பதாக கடந்த மாதம் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.