தமிழ் சினிமாவில், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். வரும் 31ம் தேதி திரைக்கு வரவுள்ள என்ஜிகே என்ற அரசியல் பின்னணி கதை படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங் . அதில், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து பட்டனை கழற்றிவிட்டிருந்த நிலையிலும், உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையிலும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் பதிவிட்டு 7 மணி நேரத்தில் 6 மில்லியன் பேர் லைக்ஸ் குவித்துள்ளனர்.

லைக்ஸ்கள் குவிந்திருந்தாலும் பலர் இதற்க்கு எதிர் விமர்சனம் செய்துள்ளனர். குட்டை பாவாடை அணியுங்கள், விளையாட்டு உடை அணியுங்கள், ஆனால், அதற்கும் குறைவான உடையை அணியாதீர்கள். இது பெண்களை தூண்டும் வகையில், அமைந்துவிடும் எனும் வகையில் தங்களின் வெறுப்பை காட்டியுள்ளான் ரசிகர்கள்.