சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமாா் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.  இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தஞ்சாவூா் சு.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரசுக்கு ஓா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்துக்காக கடுமையான போட்டி நிலவியது. ஆனால், முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி தலைமையை சந்தித்து, தனது சீட்டை உறுதி செய்தார். இந்த நிலையில், நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெற்றிருந்தது.

ப.சிதம்பரம் வெற்றிபெற திமுக கூட்டணி கட்சிகள் வாங்கு தேவை என்ற நிலையில்,.  மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு தருகிற திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகளுக்கு நன்றி என்று ப.சிதம்பரம் தெரிவித்து டிவிட் பதிவிட்டிருந்தார். அதில்,  இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் என் வேட்பு மனுவை அளிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றி. எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு. கழகம், அதன் தலைவர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம், இன்று காலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.