டில்லி,

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நிலவரம் குறித்து பேரறிவாளர் தொடர்ந்த வழக்கில்,  ஆகஸ்ட் 23க்குள் சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன்  உள்ளிட்டோர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணையில் குளறுபடிகள் இருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, பேரறிவாளர் தரப்பில்,  ராஜீவ் கொலை தொடர்பாக, சர்வதேச தொடர்புகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் குளறுபடி உள்ளதாகவும்,  ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டு குறித்து விசாரிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது,

இதைத்தொடர்ந்து இதுகுறித்து அடுத்த விசாரணையின்போது பதிலளிக்க மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்.