சென்னை:  விடுதலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணமாகின்றனர். முன்னதாக நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுதலையான நிலையில் அவர்களில் முருகன் உள்பட மூன்று பேர் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர். இதுதொடர்பான நீதிமன்றங்களின் தீர்ப்பு மற்றும் மத்திய  மாநில அரசுகள் அனுமதி வழங்கிய நிலையில், இலங்கை அரசும் அவர்களுக்கு விசா வழங்கியது.

இதையடுத்து, அவர்களை இலங்கை அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அதன்படி, அவர்கள் இன்று இலங்கை செல்கின்றனர். முன்னதாக நேற்று இரவு   அவர்களை காவல்துறையினர், திருச்சி சிறப்பு முகாமிலிருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் காவல்துறை வாகனம் மூலம் சென்னை அழைத்து வந்தனர்,. நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை தந்தை நிலையில் இன்று அவர்கள் மூவரும் இலங்கை செல்லவுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு இலங்கை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவிற்கு அனுப்பி வைத்தனர்.