சென்னை

டிகர் ரஜினிகாந்த் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.

வெகு நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவதை மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.   தாம் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினிகாந்த் தெரிவித்த பிறகு இந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவு அதிகரித்துள்ளது.   ஆனால் இது குறித்து ரஜினிகாந்த் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

பல அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்த்  அரசியல்  பிரவேசம் குறித்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.   பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என தாம் விரும்புவதாகத் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, “நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் பாஜகவில் இணைந்தாலும், தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது.  ரஜினிகாந்த் நிச்சயம் கட்சியைத் தொடங்க மாட்டார்.  ஏனெனில் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.