சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் ஆர்வம் காட்டாமல் விட்டதில் வரிசையாக அவருக்கு படங்கள் குவிகிறது.

2.0 ரிலீஸ் ஆன சில மாதத்தில் பேட்ட ரிலீஸ் ஆனது, தற்போது ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இப்படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆன அன்றே கே.எஸ் ரவிக்குமார் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவருடன் படம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் தற்போது அஜித்தை வைத்து இந்தியில் வெளியான பிங்க் பட ரீமேக் ‘நேர் கொண்டபார்வை’ படத்தை எச்.வினோத் இயக்கி வருகின்றார். தர்பார் படத்திற்கு பிறகு எச். வினோத், ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.