சென்னை

டிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார்.

வெகுநாட்களாக நடிகர் ரஜினிகாந்த் தாம் அரசியலில் இறங்க உள்ளதாக சூசகமாகத் தெரிவித்து வந்தார்.  இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர்.  இந்நிலையில் சென்ற வருடம் தாம் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தது அவர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவி வருவதால் தன்னால் யாரும் பாதிக்கப்பட கூடாது எனக் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தமது அரசியல் முடிவைக் கைவிடுவதாக அறிவித்தார்.  பிறகு அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளைத் தொடர்ந்தார்.  இது அவர் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றம் அளித்தது.

இதனால் அரசியல் கட்சியாக மாறும் எனக் கூறப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பலர் அதில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைகின்றனர்.  அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு ரஜினி 9 ஆம் தேதி சென்னை திரும்பினார்.

இந்நிலையில் இன்று அவர் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திக்க உள்ளார்.  வரும் தீபாவளி அன்று ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது,   இது குறித்து நிர்வாகிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.