சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பிய குகேஷூக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின்போது குகேஷிற்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அவர் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்களை குகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]