பாலகுமாரன் குடும்பத்தினருடன் ரஜினி (பழைய படம்)

சென்னை

றைந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இருமுறை இருதய அறுவை சிகிச்சை பெற்றவர் ஆவார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பினார்.  மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.  இன்று மதியம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது மறைவால் அவரது குடும்பத்தினரும் திரை உலகத்தினரும் வாசகர்களும் கடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.    அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது மைலாப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  அங்கு பலரும் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அவர் இல்லத்துக்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.  அப்போது அவர், “எனது மிக நெருங்கிய நண்பர்களில் பாலகுமாரனும் ஒருவர்.  நான் நடித்த பாட்சா படத்துக்கு அவர் வசனம் எழுதினார்.    அதற்குப் பிறகு அவரை எனது மற்றொரு படத்துக்கு வசனம் எழுத அழைத்தோம்.   ஆனால் அவர் தமக்கு இலக்கியமும் ஆன்மீகமும் மட்டுமே உலகமாகி விட்டதாகக் கூறி அதை மறுத்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

பாலகுமாரன் மறைவுக்கு நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட  பல திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.