சென்னை:

வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் முரசொலி பவள விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை புரிந்துள்ளார். தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி பத்திரிக்கையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது.

முரசொலி’ பத்திரிகையின் காட்சி அரங்கத்தை, இன்று காலை, இந்து நாளிதழின் என்.ராம் தொடங்கிவைத்தார். இரண்டு நாட்கள் ள் நடைபெற உள்ள இந்த விழாவில் செய்தியாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகிறார். அவரது பெயர் அழைப்பிதழில் உள்ளது.

அதே நேரம் ரஜினி பேச மறுத்துவிட்டதாக தகவல் பரவியது. “கட்சி துவங்கும் மூடில் இருக்கும் ரஜினி, இந்த விழாவில் கலந்துகொள்வதைக்கூட தவிர்த்துவிடுவார்” என்ற பேச்சு எழுந்தது. அதே நேரம், “விழாவில் ரஜினி பேசவில்லையே தவிர, நிச்சயமாக பார்வையாளராக கலந்துகொள்வார்” என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை விழா அரங்கிற்கு ரஜினி வருகை புரிந்தார். முரசொலி படக் காட்சியை அவர் பார்வையிட்டார்.