சென்னை

க்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதை ஒட்டி ரஜினி மக்கள் மன்றம் என்னும் மன்றத்தை தொடங்கி உறுப்பினர் சேர்க்கையும் ஆரம்பிக்கப் பட்டது. இன்று வரை அவர் கட்சி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அவர் தனது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ பிரச்சாரம் செய்யவோ பயன்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருகும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமத்து யார் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த்

அன்புடன்

ரஜினிகாந்த்

என அறிவிக்கப்பட்டுள்ளது.