கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய மக்கள் சார்பில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ ரஜினிகாந்த் கட்சி பெயரை விரைவில் அவரே அறிவிப்பார். அதன் பின்னர் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். அதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது.

தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்து தான் போட்டியிடுவார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் அவர் அங்கு நேரில் செல்ல வில்லை. காவிரி விவகாரத்தில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பொழிகிறது’’ என்றார்.