சென்னை:

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரேநாளில் யாராலும் நிரப்ப முடியாது என்று நடிகை கவுதமி கூறியுள்ளார். நடிகை கவுதமி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினி, கமல் திடீரென அரசியலுக்கு வந்து, வெற்றிடத்தை நிரப்ப முடியாது” என்று தெரிவித்தார். மேலும், “ ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மையே. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்ப நடைமுறையில் சாத்தியம் இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது. திருச்சியில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கவுதமி தெரிவித்தார்.