சென்னை: அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஓய்வு பெற இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ளது. ஆனால் தமது 57வது வயதில் விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தார்.

அவரின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு பணியிலிருந்து இன்று விடுவித்து அறிவிப்பு வெளியிட்டது. இந் நிலையில், தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மை செயலாளரான ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பாக அறிவியல் நகர துணைத் தலைவராக பதவியை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.