சாத்தூர்:

மிழக பால்வளத்துறை அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி ரவுடி போல செயல்படுகிறார்… அவரது பேச்சும் அப்பபடியே உள்ளது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அம்மா மக்கள் கட்சியை சரமாரியாகவும், தரக்குறைவாகவும் தாக்கி பேசினார். அதுபோல, அந்த கட்சியின் தலைவரான டிடிவி தினகரனையும் கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து டிடிவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், இரட்டை இலை மற்றும் அதிமுகவை மீட்பதற்காகவே  அமுமுக கட்சியை இன்னும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இரட்டை வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தைல் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறினார்.

அமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்க,  அமைச்சராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறார்.. அவர் பேசுவது தவறு, என்றவர், அவர் அமைச்சசர் போலவா இருக்கிறார்… ரவுடி. பூசாரி  போல காணப்படுகிறார் என்று  பதிலடி கொடுத்தார்.

தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன்,  இருட்டில் தனியாக போக பயந்தவர்கள் தான் தேர்தலுக்கு கூட்டணி வைத்து உள்ளனர் என்றும் கூறினார்.