மதுரை:

துரையில் அதிமுக  முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் விழா ஒத்தக்கடை அருகே யானைமலை பகுதியில் நடைபெற உள்ளது. அந்த  பகுதியை முன்னாள் அமைச்சர்  ராஜகண்ணப்பன் மற்றும் திமுக தலைவர்கள்  சென்று பார்வையிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். இவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிட சீட் கேட்ட நிலையில், அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் வெறுப்படைந்த  ராஜகண்ணப்பன்,  மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், வரும் 23ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனது யாதவ சமுதாய மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக அறிவித்து உள்ளார். அதற்காக மதுரை ஒத்தக்கடை அருகே யானைமலை பகுதியில் பிரமாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை வடக்கு தெற்கு மாவட்ட கழகம் ஏற்பாடு செய்து நடத்துகிறது. அந்த பகுதியை ராஜகண்ணப்பன்  உள்பட  மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ அவர்கள் மற்றும் மணிமாறன் ஆகியோர்  நிகழ்ச்சி நடைபெறும் திடலை பார்வையிட்டனர்.