கொரோனா அச்சுறுத்தலால் நாடே ஊரடங்கில் உள்ளது .நீண்ட நாட்களாக எந்தவொரு பணியுமே நடைபெறாத காரணத்தை முன்னிட்டு ரைசா தனது ட்விட்டர் பதிவில்

“எனது வேலை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரம் அது எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். என்ன இது கொரோனா ? இது ஒரு காரணத்துக்காக இங்கு வந்திருக்கிறதா?

மற்றவர்களை விட தனக்கு அறிவு அதிகம், நல்ல விஷயத்துக்காக இதைச் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்ட ஒருவர் உள்நோக்கத்துடன் செய்த விஷயமா இது? நாம் கற்றுக்கொண்டு விட்டோமா? இதைத் தாண்டி வர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?” என பதிவிட்டுள்ளார் .