சென்னை:
சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன என்று மாநகராட்சி துணை ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சமீரன், சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன என்றும், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டு விட்டது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை கொடுத்திருந்ததால் தயார் நிலையில் இருந்தோம் என்றும் ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது. பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை, கடந்த ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கையால் தற்போது பெரிதாக மழைநீர் தேங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.