சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தேனி, தென்காசி, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.