சென்னை

ரும் 28, 29 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.   அதில், “தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 27-ம் தேதி (இன்று) பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.

வரும் 28, 29-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

வரும் 30-ம் தேதி கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.