சென்னை

டுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 8 தமிழக மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று  தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.

தற்போது சென்னை உட்பட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.