சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. 

பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னை வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.