சென்னை: தீபாவளியையொட்டி ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்காலிகமாக ரூ.30 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும்,  பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், பிளாட் பாரம் டிக்கெட்டுக்கள் தற்காலிகமாக விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புனே ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துஉள்ளது. இந்த ற்காலிக  விலை உயர்வு வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 10 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக் காலத்தில் “தேவையற்ற மக்கள் மற்றும் கூட்டத்தைத் தவிர்க்க” இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே பிரிவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுபோல தெற்கு ரயில்வே உள்பட நாடு முழுவதும் தற்காலிகமாக பிளாட் பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.