சென்னை

ரும் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 21 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  நிகழ்வில் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம் ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி மாற்றம் 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள  மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

ராகுல் காந்தி பாஜக ஆட்சியை அகற்றும் பேராற்றலும், வல்லமையும் மிக்க தலைவராக விளங்கி வருகிறார். தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு ராகுல் காந்தி 21-ம் தேதி வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.”

எனக் கூறப்பட்டுள்ளது.