துரை

ச்சநீதிமன்றம் அளித்த ஜல்லிக்கட்டு தடை ரத்து தீர்ப்பை மதுரை மாவட்ட மாடுபிடி வீரர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் வரவேற்றுள்ளன

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுக்கு பல்வேறு நீதிமன்றத் தடையும், சட்டச் சிக்கல்களும் ஏற்பட்டு வந்தன. பிறகு 2017-ம் ஆண்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டபோது அலங்காநல்லூரில் மக்கள், ‘வாடிவாசலைத் திறக்கும் வரை வீட்டு வாசலை மிதிக்க மாட்டோம்’ என ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

அன்று தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி முதல் மெரினா கடற்கரை வரை பெரிய அளவில் உருவெடுத்தது.  உலகெங்கும் உள்ள தமிழர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தி வந்தது.

இச் சட்டத்துக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன .நேற்று இந்த வழக்கில், ஜல்லிக்கட்டுக்குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை, மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன்,:

“உளப்பூர்வமாக வரவேற்கக் கூடிய இந்தத் தீர்ப்பைத்தான் நாங்கள் மலைபோல் நம்பியிருந்தோம். 5 பேர் கொண்ட நீதிபதிகள் அனைவரும் ஒரே மாதிரி தீர்ப்பு வழங்கியது ஜல்லிக்கட்டுக்கு வெற்றி மேல் வெற்றி வந்ததுபோல் உணர்கிறோம்.

போட்டி அமைப்பாளர்கள் கடைசி வரை அச்சத்துடனே போட்டி ஏற்பாடுகளைச் செய்வார்கள். இனி அந்த மாதிரி நிலைக்கு வாய்ப்பு இல்லை. தடையின்றி அச்சமினிரி இனி போட்டியைத் திருவிழாபோல் ஆண்டுதோறும் உற்சாகமாக நடத்துவோம்.”

எனக் கூறி உள்ளார்