சென்னை

ன்று பத்து மற்றும் பதினோராம் வகுப்புத் தேர்வு முடிவுகல்  வெளியாக உள்ளன.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12,11, மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதில் +2 பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு தனித்தனியாக வேறொரு நாட்களில் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது.

இந்த 2 தேர்வு முடிவுகளையும் ஒரே நாளில் வெளியிட ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். எனவே தேர்வுத் துறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட இருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பிளஸ்-1 பொதுத் தேர்வைப் பொறுத்தவரையில் 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.  இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவை அரசுத் தேர்வுத்துறை வெளியிடுகிறது.

இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள முடியும். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தவிர மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட உள்ளன.