சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை 6.30 மணி அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.  இந்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புத்தகமான உங்களின் ஒருவன் புத்தக வெளியீடு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது.  இதற்காக டெல்லியில் இருந்து ராகுல் இன்று மதியம் சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிடுகிறார்.  புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு,  மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையக மான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தருகிறார்.

அங்கு  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மக்களின் நன்மதிப்பை பெறுவது தொடர்பாக ஆலோசனை வழங்க உள்ளதுடன், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஆலோசனை கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது.