சென்னை:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலக தேவையில்லை என்று கூறிய ரஜினிகாந்த், அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும்  தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் மத்திய மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சி தோல்வி மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்த கேள்வி களுக்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், காங். மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படாததால்தான் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது என்று கூறினார்.

மேலும், தேர்தல் தோல்விக்காக  ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என்றவர், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது…. ஆளும்கட்சி போல எதிர்க்கட்சியும் முக்கியம்… மோடி ஆட்சிக்கு வலுவான எதிர்ப்பு தேவை, அவர் போராட வேண்டும் என்று கூறிய ரஜினி, ராகுல் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி,ராகுல் பதவி விலகக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.