நெல்லை

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெல்லையில் பிரசாரம் செய்து வருகிறார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு உள்ளது.  இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும்  மாநிலம் எங்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். நெல்லையில் ராகுல் காந்தியை தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய ராகுல்காந்தி, அங்கிருந்து கார் மூலம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பாளையங்கோட்டை நெல்லை – திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார்ப் பள்ளி மைதானத்துக்குச் சென்றார்.

ராகுல் காந்தி அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசி உள்ளார்.

ராகுல் காந்தி தனது உரையில்,

தமிழகத்தையும், தமிழக மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் தமிழகத்திற்கு வருவதை மிகவும் விரும்புகிறேன். நான் இந்தியாவைப் புரிந்து கொள்ள விரும்பும் போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தமிழகத்தின் ஆளுமைகள். 

நான் தமிழகத்தை விரும்புவதால்தான் எனது யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். என்னைத் தமிழக கலாசாரம், பண்பாடு கவர்ந்துள்ளது. தமிழக மக்கள் என் மீது அன்பைப் பொழிந்துள்ளனர். 

இந்த தேர்தல் ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூகநீதி; மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. ஆகிய இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறுகிறது. நமது ணியில் இருப்பவர்கள் ஒரே கலாசாரம், ஒரே மொழி என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். 

காங்கிரஸின் நிலைப்பாடு இந்தியாவில் உள்ள அனைத்துக் கலாச்சாரங்களும் காக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆனால் தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இந்தத் தாக்குதலைத் தமிழர்கள் மீதான தாக்குதல் என்றே பார்க்கிறேன்.  நாட்டில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் வேண்டும்.

என்று கூறி உள்ளார்.