புதுடெல்லி

டைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக மனீஷ் சிசோடியா இடைக்கால ஜாமீ கோரி மனு அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.

பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்ததால் மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர். சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 18ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனு மீதான விசாரணை நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.