சென்னை: இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 200 ரன்களைக் கடந்துள்ளது. துணைக் கேப்டன் அஜின்கியா ரஹானே.

தற்போதைய நிலையில், இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக பெர்பார்மன்ஸ் குறித்து விமர்சிக்கப்பட்ட ரோகித் ஷர்மாவும், ரஹானேவும் சிறப்பாக ஆடிவருவதுதான்.

இவர்கள் இருவரும் நிலைத்துநின்று ஆடி வருவதன் மூலம், இந்திய அணியை சற்று வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இணையைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பெளலர்கள் தற்போதுவரை திணறி வருகிறார்கள்.

சேப்பாக்கம் மைதானம், முதல் நாளிலிருந்தே பந்துகளை திருப்ப உதவும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த இருவரும் நிலைத்து நின்று ஆடிவருவது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.