‘ரேனிகுண்டா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன்.

தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, அஜித்தின் ‘பில்லா 2’, விஷ்ணு விஷாலின் ‘நீர்ப்பறவை’, நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் உடல்நலக்குறைவோடு பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருவதாக வீடியோ வெளியிட்டிருந்த தீப்பெட்டி கணேசனுக்கு நடிகர் விஷால், ஸ்ரீமன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட ஒரு சிலர் உதவினர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீப்பெட்டி கணேசன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

“நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொன்று செய்தேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்றவரையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.