2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த படம் பரியேறும் பெருமாள் . சாதி மற்றும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் முன்னேற துடிக்கும் இளைஞனின் பிரச்சனை எடுத்துக்கூறும் படமாக இது அமைந்தது .

இந்நிலையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வின் கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது.

அந்த கேள்வியில் தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும் என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கேள்வியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்டு ட்விட்டரில் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.