சென்னை: அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு கே வி குப்பம் தொகுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து உள்ளன. அந்த கட்சிகளுடன் அதிமுக பேச்சவார்த்தை குழு தொடர்ந்து தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தை குழுவுடன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யுமாறு புரட்சி பாரதம் கட்சி கேட்டிருந்தது. இந் நிலையில் அக்கட்சிக்கு கேவி குப்பம் தொகுதியை அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் புரட்சி பாரதம்  போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.