சென்னை: விமானங்களை இயக்குவதில் ‘பஞ்சுவாலிட்டி’ கடைபிடிப்பதில்  உலக அளவில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி பல ஆயிரம் பேர் வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பயணித்து வருகின்ற னர். இந்த நிலையில், சர்வதேச அளவில் விமான போக்குவரத்தில், குறித்த நேரத்திலும், சிறப்பாக செயல்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை, சிரியம் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சென்னை விமான நிலையம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதில், நேரம் தவறாமல் விமானங்களை இயக்கிய விமான நிலையங்களின் பட்டியலில், சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 89.32 சதவீதம் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா விமான நிலையம், விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவதில் 96.51 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது.