புதுக்கோட்டை:
புதுக்கோட்டைதேர் விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் சேகர் பாபு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இன்றைய தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையில் கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக கோயில் ஊழியர்கள் ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள், சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டைதேர் விபத்து நடத்த இடத்தில் அமைச்சர் சேகர் பாபு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.