புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசு செயலர்கள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது பாஜக கூட்டணி அரசு செய்த் வருகிறது.  இங்கு அந்த கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார்.

நேற்று புதுச்சேரியில் கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தில் அரசு செயலர்கள் தங்கள் துறைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும் அதிகாரிகள் தங்கள் துறைகளை பற்றி கவலைப் படாத நிலையில் திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன் என அவர் சாடினார்.