புதுச்சேரி

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் கடல் நீர் நிறம் மாறுவதையொட்டி ஆய்வு செய்துள்ளனர். 

கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் 7 முறை கடல் நீர் செந்நிறமாக மாறியுள்ளது. அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இதனால் மிகவும் அச்சமடைந்தனர்.

எனவே இது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நேற்று கடல் நீர் நிறம் மாறியது தொடர்பாகப் புதுச்சேரியில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியில் நடத்திய ஆய்வில் கடல் நீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.