டில்லி

ரூ. 1614 கோடிக்குக் கடலோரக் காவல்படைக்கு  ரோந்து கப்பல்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் இட்டுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்தியக் கடலோர காவல்படைக்கு 6 ரோந்து கப்பல்கள் வாங்குவதற்காக மசாகான் டாக்யார்டு ஷிப்பில்டர்ஸ் (Mazagon Dockyard Shipbuilders) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் மொத்தம் ரூ.1,614.89 கோடிக்கு கையெழுத்து ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ரோந்து கப்பல்கள் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிப்பு, கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.