டில்ளி

புதிய வகை கொரோனா இந்தியாவில் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர்மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து, உலகையே ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறிக் கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்குச் சவாலாக உள்ளது. து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது.

கொரோனா பாதிப்பு சமீப காலமாகத்தான் குறைந்துள்ளது.  ஆயினும் கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிவதால் அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நிதி அயோக் உறுப்பினர் வி கே பால் இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ராஜஸ்தானில் 2 பேருக்கும், கோவாவில் 19 பேருக்கும். மகாராஷ்டிராமற்றும் கேரளா மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அவர்

“புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மற்றும் மாநில அளவில் முறையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

கொரோனா இன்னும் நிறைவுபெறாத நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் மற்றும் அதன் தீவிரம் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் ஆகும்.  கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில அரசுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்”

என்று தெரிவித்துள்ளார்.