புதுச்சேரி:  நாராயணசாமி தலைமையிலான காங்கிரசு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, துணைநிலை ஆளுநரை சந்தித்த நாராயணாசமி, அமைச்சரவை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு, சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், நெருக்கடியை சந்தித்தது. இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்ட நிலையில்,  சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அரசு கவிழ்ந்ததது

இதையடுத்து, அவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநகர் மாளிகை சென்ற முதல்வர் நாராயணசாமி,  அங்கு  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.